காபூலில் உள்ள குருத்வாராவில் அடுத்தடுத்து 2 முறை குண்டுவெடிப்பு.. 2 பேர் உயிரிழப்பு.!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில், அடுத்தடுத்து இரண்டு முறை நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

காலை 7 மணியளவில் குருத்வாராவில் ஏராளாமன சீக்கியர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, அதன் இரு வாயில்களிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் சிக்கி ஆப்கன் காவலர் ஒருவரும் சீக்கியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குருத்வாராவில் பலர் சிக்கியுள்ளதால் இறப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.