கேரளத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை.!

கேரளத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் கேரளத்தின் வடமாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை வலுப்பெறவில்லை. இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதே போக்கு நீடித்தால் ஜூன் பிற்பகுதியில் மழைப்பொழிவில் சற்று முன்னேற்றம் காணப்படும் என வானிலை ஆய்வு முகமைகள் தெரிவித்துள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.