அசாம், மேகாலயாவில் மழைக்கு 42 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கவுகாத்தி-வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை, 42 பேர் பலியாகி விட்டனர்.

latest tamil news

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ௬௦ ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் ௧௪௫ மி.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.தொடர்மழை காரணமாக அசாமில் 2,930-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ராஜார், சோனித்பூர் மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பகலாடியா, புத்திமாரி, ஜியா பரலி, கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, 43 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.மேகாலயாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.

பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அசாம், மேகாலயாவில் கன மழை பாதிப்புக்கு இதுவரை, 42 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 24 பேரும், மேகாலயாவில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் சிக்கியிருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு, ரப்பர் படகுகள் மூலம் முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

latest tamil news

திரிபுரா தலைநகர் அகர்தலாவிலும் கன மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 6 மணி நேரத்தில் 145 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அகர்தலாவில் 60 ஆண்டு களில் இல்லாத அளவாக பெய்த கன மழையால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.