அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சென்னையில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம்.!

ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகே ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ராணுவம் நடத்தக்கூடிய CEE 2021 தேர்வுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வரும் இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், போர் நினைவுச் சின்னம் அருகே தேசியக்கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர்கள் கலைந்து செல்லாத மறுத்ததால் அவர்களை கைது செய்த போலீசார் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.