வடமாநிலங்களில் நடக்கும் போராட்டத்தால் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டம் காரணமாக, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சந்த்ரகாச்சி – சென்னை சென்ட்ரலுக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட ஏசி அதிவிரைவு ரயில்(22807), சென்னை சென்ட்ரல் -ஹவுராவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12840), தனபாத் – ஆலப்புழாவுக்கு நேற்று முன்தினம் மதியம் புறப்பட்ட விரைவு ரயில் (13351), டாடாநகர் – யஸ்வந்த்பூருக்கு நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12889), திருச்சிராப்பள்ளி – ஹவுராவுக்கு நேற்று முன்தினம் மதியம் புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12664), புதிய தின்சுகியா – கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட அதிவிரைவு வாராந்திர ரயில் (22502), யஸ்வந்த்பூர் – ஹவுராவுக்கு நேற்றுமுன்தினம் புறப்பட்ட ரயில் (12864) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் – சாப்ராக்கு நேற்று புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12669) ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தனபூர் – கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு நேற்று இரவு புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டது.

ஹைதராபாத் – சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (12604), ஹைதராபாத் – தாம்பரத்துக்கு இயக்கப்படும் சார்மினார் விரைவு ரயில் (12760) ரத்துசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் வழக்கம்போல மீண்டும் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்திலும் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.