இலங்கைக்கு மீண்டும் உதவி! இந்தியா ஆலோசனை


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, மீண்டும் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கைக்கு மீண்டும் உதவி! இந்தியா ஆலோசனை

இலங்கையுடன் இணைந்து செயற்பட ஒருமித்த ஆதரவு

இலங்கை எதிர்நோக்கியுள்ள வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கு இந்தியாவினால் வழங்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நிலையில் அண்டைய நாடான இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஒருமித்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.  





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.