#BigBreaking || அதிமுக ஒற்றை தலைமையை எடப்பாடி கே பழனிசாமி ஏற்கவேண்டும் – ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.!

அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து அதிமுகவில் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் செய்தித் துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் ராஜு அவர்கள் தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் அதிமுக ஒற்றை தலைமையை எடப்பாடி கே பழனிசாமி ஏற்கவேண்டும் என்று ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.