ஆப்கனில் குண்டுவெடிப்பு; 100 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது மத்திய அரசு| Dinamalar

காபூல்: ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்நாட்டில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மத்திய அரசு விசா வழங்கி உள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூலில், சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ‘கர்தே பர்வன் குருத்வாரா’ உள்ளது. இங்கு நேற்று காலை திடீரென அடுத்தடுத்து இரண்டு பயங்கரமான குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தலிபான் ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலடியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் 111 பேருக்கு மத்திய அரசு மின்னணு முறையில் விசா வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீக்கிய அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.