குருத்வாரா மீது பயங்கரவாத தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாரா மீது, நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 7 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்கள் 100 பேருக்கு விரைவாக இ-விசா வழங்கப்பட்டது.

குருத்வாரா மீது வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில், காபூலில் உள்ள குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.