காங்கிரசுக்கு வரலாறு மட்டுமே உண்டு; வருங்காலம் இல்லை: தெலுங்கானா மந்திரி பேச்சு

ஐதராபாத்,

தெலுங்கானாவின் மகபூப்நகர் பகுதியில் கொல்லாப்பூர் என்ற இடத்தில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் தெலுங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரி கே.டி. ராமராவ் கலந்து கொண்டார்.

அவர் கூட்டத்தில் பேசும்போது, சமீபத்தில் வாரங்கல் நகருக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்குங்கள். விவசாயிகளின் வாழ்வை மாற்றி காட்டுகிறேன் என கூறினார்.

ஆனால், காங்கிரசுக்கு 10 முறை மக்கள் வாய்ப்பு வழங்கி விட்டனர் என்பது ராகுலின் நினைவில் இருக்க வேண்டும். பதிலுக்கு அவர்கள் நாட்டையும், தெலுங்கானாவையும் நாசம் செய்து விட்டனர் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு மட்டுமே உண்டு. அக்கட்சிக்கு வருங்காலம் என்பதே இல்லை. நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே இல்லை. தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் கட்சி சாதி பைத்தியமுடன் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.