உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுப்பதை நிறுத்த வேண்டும் : ரஷ்யாவிற்கு ஜெர்மனி பிரதமர் வலியுறுத்தல்

ருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், உணவு தானிய ஏற்றுமதிக்கு பாதுகாப்பான வழித்தடத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பான போக்குவரத்தை ரஷ்யா செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும்,  ரஷ்யா அந்த வழித்தடத்தை படையெடுப்பிற்கு பயன்படுத்த மாட்டோம் என நம்பகமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஓலப் ஷோல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.