படிப்பில் ஆர்வம்! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி! ஆனால் தந்தை தேர்ச்சி!

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நடப்பாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை தேர்ச்சி பெற, மகன் தோல்வியுற்றுள்ளார். புனேவை சேர்ந்த பாஸ்கர் வேக்மர் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பச் சூழ்நிலை காரணமாக 7ஆம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்தி விட்டார்.
தற்போது அவரது மகன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராவதை கண்டு, ஆர்வம் அடைந்த பாஸ்கர், 43 வயதில் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வு முடிவில் 43 வயதான தந்தை தேர்ச்சி பெற்ற நிலையில், மகனோ தோல்வி அடைந்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.