மனைவியை கொலை செய்து விட்டு கழிவறையில் உடலை வைத்த கணவன்..!

மனைவியை கொன்று  அவரது சடலத்தை கழிவறையில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, கபில் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். நேற்று இவர் காவல்நிலையத்தாய் தொடர்பு கொண்டு மனைவியை கொலை செய்த்தாக தெரிவித்தார். இந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கழிவறையில் இருந்த சந்தோஷி தேவியின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விஜய் சந்தோஷியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். முதல் திருமணத்தில் 4 குழந்தைகளும் உள்ளனர்.

சந்தோஷிக்கும் விஜயைக்கும் குழந்தைகளை பார்த்து கொள்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவதன்று, மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு மாலை சந்தோஷி வீடு திரும்பியுள்ளார்.குழந்தைகள் தூங்கிய பின் குழந்தை இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதனை அடுத்து அவரது உடலை துணியால் சுற்றி கழிவறையில் அடைத்தனர். வெகுநேரம் வீட்டிலேயே சடலத்தை வைத்திருக்க முடியாமல் போனதால் வேறு வழியின்றி காவல்துறைக்கு தகவல் அளித்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.