அமெரிக்காவில் துவங்கியசீனிவாச கல்யாணங்கள்| Dinamalar

திருப்பதி–திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அமெரிக்காவில் சீனிவாச கல்யாணங்கள் துவங்கின.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ், ஏழுமலையான் கல்யாண உற்சவங்களை நடத்தி வருகிறது. இவற்றை நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது.ஆனால் கொரோனா தொற்று கால கட்டத்தில் கல்யாண உற்சவங்கள் நடத்தப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தேவஸ்தானம் அமெரிக்காவின், 5 நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு நேற்று துவங்கியது. ஜூலை 5ம் தேதி வரை நடக்கும் சீனிவாச கல்யாண உற்சவத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளும் வகையில், தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.