தங்கக் கடத்தல் விவகாரம் விசாரணைக்கு ஆஜராக சொப்னாவுக்கு சம்மன்: அமலாக்கத் துறை அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் விவகாத்தில் முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார்.இந்நிலையில், சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலம் தொடர்பாக அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை தீர்மானித்து உள்ளது. இதற்காக வரும் 22ம் தேதி கொச்சியில் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, நீதிமன்றத்தில்  சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பெற்றுள்ளது. மேலும், சுங்க இலாகாவிடம் அவர் அளித்த ரகசிய வாக்குமூலம்  விவரங்களையும் வாங்கியுள்ளது. இவை இரண்டையும்  ஒப்பிட்டுப் பார்த்த பின்னர் சொப்னாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.