கனடாவில் சொகுசு வாழ்க்கை! விசா கனவில் இருந்த தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை தகவல்


கனடாவில் வேலை செய்து சொகுசாக வாழ போவதாக கனவு கண்ட தமிழர் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் விஜய சரவணன் (26). இவரது செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி இ-மெயில் வந்துள்ளது.
அதை உண்மை என்று நம்பிய விஜய சரவணன் அதில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் கனடாவிற்கு செல்ல தயாராக இருக்கும்படியும் 5 வங்கி கணக்குகளை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்யும்படியும் கூறினார்.

கனடாவில் சொகுசு வாழ்க்கை! விசா கனவில் இருந்த தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை தகவல்

அதை தொடர்ந்து விஜய சரவணன் அந்த 5 வங்கி கணக்குகளில் ரூபாய் ரூ. 8 லட்சத்து 13 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் விமான டிக்கெட் விசா ஆகியவற்றை அனுப்புவதாக கூறி உள்ளார்.

பின்னர் அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் சரவணன் தனது கனடா கனவு சுக்குநூறாக உடைந்ததையும், தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்தார்.

புகாரையடுத்து பொலிசார் கனடா மோசடி நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். 

கனடாவில் சொகுசு வாழ்க்கை! விசா கனவில் இருந்த தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை தகவல்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.