கருங்கடல் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் காலிபர் ஏவுகணையை ஏவிய காட்சிகள் வெளியீடு.!

கருங்கடலின் ஒரு பகுதியில் இருந்து தொலை தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் காலிபர் ஏவுகணையை ரஷ்ய படைகள் ஏவிய காட்சிகளை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தினசரி செய்தியாளர்கள் சந்திப்பின் போது அந்த காட்சிகள் குறித்து விளக்கமளித்த அமைச்சகம், அந்த ஏவுகணை உக்ரைனின் தினிப்ரோவில் உள்ள ராணுவ கட்டளை மையத்தை தாக்கியதாக தெரிவித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ ஜெனரல்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.