தமிழ்நாட்டில் இன்று 30 மாவட்டங்களில் 686 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 294 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 294, செங்கல்பட்டில் 129, திருவள்ளூரில் 50 மற்றும் காஞ்சிபுரத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கன்னியாகுமரி 47, கோவை 24, தூத்துக்குடி 14, மதுரை 13, திருநெல்வேலி 12, திருச்சியில் 10 பேருக்கும்

ராணிப்பேட்டை 7, நீலகிரி மற்றும் சேலம் 6, ஈரோடு 5,

திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் விருதுநகரில் தலா 4 பேருக்கும் கடலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 3 பேருக்கும்,

தருமபுரி மற்றும் கரூரில் தலா 2 பேருக்கும்

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 17,122 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 347 ஆண்கள் 339 பெண்கள் என மொத்தம் 686 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

257 பேர் இன்று குணமடைந்த நிலையில் 3951 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.