நட்பை ஏற்க மறுத்த சிறுமி; கத்தியால் குத்தி படுகொலை| Dinamalar

மதுரா : உத்தர பிரதேசத்தில் சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’கில் நட்பு அழைப்பை ஏற்க மறுத்த, 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி படுகொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.

உ.பி., மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இங்குள்ள தொழிற்சாலையில் பாதுகாவலராக பணியாற்றுகிறார். இவரது மகளுக்கு 16 வயது. இந்த சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்ற இளைஞர் பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்தார். அந்த சிறுமி, அதை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டுக்கு கத்தியுடன் வந்தார்; சிறுமியை சரமாரியாக குத்தினார்.

அதை தடுக்க வந்த சிறுமியின் தாயையும் குத்தினார். பின், தன்னைத் தானே குத்திக் கொண்டார். இந்த சம்பவத்தில், அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுமியின் தாயும், ரவியும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவி மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.