திமுக எம்.பி.கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி.!

திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் கனிமொழி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.