தன்னை வெட்டவந்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை.. சொத்துத் தகராறில் விபரீதம்

தூத்துக்குடியில் சொத்துப் பிரச்னை காரணமாக தந்தையை வெட்ட வந்த மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவருக்கும் இவரது மகன் காசிராஜனுக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காசிராஜன், தனது தந்தை மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று காலை தமிழ் அழகன் மற்றும் அவரது தம்பி கடல் ராஜா மற்றும் அவரது உறவினர் காசிதுரை ஆகியோருடன் நீதிமன்றம் வந்துள்ளார்.
image
பின்னர், நீதிமன்றத்தல் ஆஜராகி விட்டு நீதிமன்றம் எதிரே உள்ள பகுதிக்கு செல்லும் போது அங்கு வந்த காசிராஜன், தன்னுடைய தந்தை உள்ளிட்ட 3 பேரையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட தமிழ் அழகன், கடல் ராஜா, காசிதுரை, ஆகியோர் காசிராஜனிடம் இருந்து அரிவாளை பிடிங்கி காசிராஜனை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் எதிரே நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.