செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர்

ஏரியின் உயரம் 24 அடியாகும். தொடர் நீர்வரத்து காரணமாக இன்று காலை நிலவரப்படி ஏரியில் 23.48 அடியும், 3,500 மில்லியன் கன அடி நீரும் உள்ளது. அதே சமயத்தில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி ஏரியின் நீர்வரத்து 550 கன அடியாக இருக்கிறது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளால் மழை விட்டு விட்டுப் பெய்வதால் வெள்ள நீர்வரத்து காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.

செம்பரம்பாக்கம் எரியின் பாதுகாப்பான நீர் அளவு 23 அடிதான். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருவதன் காரணமாக இன்று மதியம் 12 மணியளவில் ஏரியிலிருந்து வினாடிக்கு 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. மேலும், நீர்வரத்தின் அளவை பொறுத்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதன் காரணமாக, நீர் வரும் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு ஆற்றின் இரண்டு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.