ஐ.நா. நிரந்தர பிரதிநிதியாக ருச்சிரா காம்போஜ் நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக, ருச்சிரா காம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச பிரச்னைகளில், நம் நாட்டின் நிலைப்பாட்டை திறமையுடனும், ஆதாரத்துடனும், ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்து வைக்கும் சவாலான பணியை, ஐ.நா.,வுக்காக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதிகள் செய்து வருகின்றனர். தற்போதைய பிரதிநிதியாக டி.எஸ்.திருமூர்த்தி பதவி வகித்து வருகிறார்.

latest tamil news

இந்நிலையில் இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதியாக இன்று ருச்சிரா காம்போஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.1987-ம் ஆண்டு ஐ.எப்.எஸ்., கேடரான இவர் தற்போது பூட்டானுக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.