சீரியஸான மேட்சில் சிரிப்பை கிளப்பிய இலங்கை அம்பயர் குமார் தர்மசேனா.!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, இலங்கை நடுவர் குமார் தர்மசேனா, கேட்ச் செய்வது போல் பாவனை செய்தது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

ஷாட் பால் ஆக வந்த அந்த பந்தை அலெக்ஸ் கேரி அடிக்க, ஸ்கொயர் லெக் அம்பயராக நின்றிருந்த குமார் தர்மசேனா கேட்ச் பிடிக்க எத்தனித்தார். ஆனால், தாம் பீல்டர் இல்லை அம்பயர் தான் என்பதை கடைசி நிமிடத்தில் உணர்ந்த அவர் பந்தை பிடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.

அவரது இந்த செயல் சக வீரர்களை மட்டுமல்லாது இணையதள பார்வையாளர்களையும் சிரிக்க வைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.