விம்பிள்டன் தகுதிச்சுற்றுப் போட்டி : இந்திய வீரர்கள் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.விம்பிள்டன் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது

இன்று நடைபெற்ற தகுதி சுற்று முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் கோப்ரிவாவிடம் 7-5,6-4 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் .

மற்றோரு இந்திய வீரரான யுகி பாம்ப்ரி,தகுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் மிரால்லஸிடம் 7-5, 6-1 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார் .


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.