பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்ட நபர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்.!

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு உள்பட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சபாரத்தினம் என்பவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மதுரை மாவட்டம் கீழ அனுப்பானடியைச் சேர்ந்த சபாரத்தினம் என்பவரை பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர்.

தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், என்கவுண்டரில் கொலை செய்ய போலிசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரை வரும் 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.