மாலத்தீவு யோகா நிகழ்வில் வன்முறை| Dinamalar

மாலே:தெற்காசிய நாடான மாலத்தீவில், இந்திய துாதரகம் சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைநகர் மாலேவில் நடந்த யோகா நிகழ்வில், துாதரகம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட, 150க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது, மைதானத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், யோகாவில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. வன்முறையில் ஈடுபட்டோரை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், ‘பெப்பர் ஸ்பிரே’ ஆகியவற்றை பயன்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ”வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.