குலாம் நபிக்கு கொரோனா

புதுடெல்லி:  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை வீட்டு தனிமைப்படுத்தி கொண்டார். இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் தனது டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உட்பட பலர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.