நடிகை வேதிகாவுக்கு கொரோனா

மும்பை: தென்னிந்திய நடிகை வேதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள வேதிகா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘முதல்முறையாக எனக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதிகமான காய்ச்சலால் சிரமப்படுகிறேன். லேசான அறிகுறிகள் இருந்தாலும், உடனே உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். உடல் வலி மற்றும் அதிக காய்ச்சல் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருமுறை கொரோனா வந்தால், மீண்டும் கொரோனா பாதிப்பு வராது என்று இருந்துவிட வேண்டாம். கொரோனா குணமான பிறகும், ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்திருக்கிறேன். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்காகவும், உங்கள் அன்புக்கு உரியவர்களுக்காகவும் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.