பரபரப்பு.. பிரபல தமிழ் நடிகர் மீது சரமாரியாக தாக்குதல்..!

விஜய்யின் ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான பெஞ்சமின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நடிகர் பெஞ்சமின் தனது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு ‘கூகுள் பே’ மூலம் 350 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், அவருடைய வாகனத்திற்கு நீண்ட நேரமாகியும் பெட்ரோல் போடாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து அவர் பங்க் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியதால், அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெஞ்சமினை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.