சொந்த மண்ணில் வரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் அணி! புகழ்ந்து தள்ளிய தமிழ் வம்சாவளி வீரர்


அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வரலாற்று சாதனை படைத்துள்ள இலங்கை அணிக்கு ருசல் அர்னால்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடர், தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்றது.

சொந்த மண்ணில் வரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் அணி! புகழ்ந்து தள்ளிய தமிழ் வம்சாவளி வீரர்

இதன் நான்காவது போட்டி நேற்று நடந்த நிலையில் இலங்கை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானான தமிழ் வம்சாவளி வீரர் ருசல் அர்னால்ட் டுவிட்டரில், வெல் டன் இலங்கை அணி! அருமையான கூட்டு முயற்சி மற்றும் வெற்றிக்கான வழிகளை கண்டறிந்தீர்கள்.
இலங்கை – அவுஸ்திரேலிய போட்டி மிகவும் ரசிக்கும்படி இருந்தது என பதிவிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.