BREAKING: ஆப்கனை ஆட்டிப்படைத்த நிலநடுக்கம்: 130 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, 130 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் நாட்டின், பக்டிகா என்ற மாகாணத்தில், இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தை உணர்ந்த பொது மக்கள், அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். வணிக வளாகங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 250 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆசியாவிலும் நுழைந்த குரங்கு அம்மை… லெபனானில் ஒருவருக்கு தொற்று கண்டுபிடிப்பு!

பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தகவலை தாலிபான் அமைப்பினர் உறுதிப்படுத்த உள்ளனனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.