#மதுரை || ஏ.எடி. எம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண்..!

ஏ.டி.எம் மையத்திற்கு வரும் வயதானவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை, அண்ணாநகர், கே.கே.நகர், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக காவல்துறயினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள ஏ.டி.எம் மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் உள்ளவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் முதியவர்களிடம் இருந்து நூதனமான முறையில் தேனி மாவட்டத்ட்தை சேர்ந்த மணிமேகாலை (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 65 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கப்பணம்  மற்றும் தங்கசங்கிலியை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.