15 வயது சிறுமி பலமுறை பலாத்காரம்.. 68 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், தான் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 66 வயது முதியவர் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததை சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட அந்த முதியவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் முதியவர் குற்றவாளி என்று உறுதியானது. இதனால், முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். மேலும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.