காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயமுறுத்தி அடக்க முடியாது என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டனர்! ராகுல் காந்தி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயமுறுத்தி அடக்கி வைக்க முடியாது என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டனர் என அமலாக்கத்துறை அதிகாரி களின் விசாரணை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத் துறை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியது. சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாததால், அவர் ஆஜராக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முதல்கட்டமாக  கடந்த 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சுமார் 27மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 20ஆம் தேதி விசாரணை நடத்திய நிலையில், 5ஆவது நாளாக 21ந்தேதியும் விசாரணை நடத்தினர். நேற்று காலை 11.15 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் ஆஜரானார். அப்போது, இரவு 8 மணிக்கு மட்டும் அரை மணிநேரம் ஓய்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு, நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்து நள்ளிரவில் ராகுலை அனுப்பி வைத்தனர்.ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 50 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறையினர் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், தன்னிடம் நடத்தப்பட்ட அமலாக்கத்துறையினரின் விசாரணை குறித்து கூறிய ராகுல்காந்தி, அமலாக்கத்துறை மற்றும் அது போன்ற ஏஜென்சிகளின் விசாரணை  என்னைப் பாதிக்காது. என்னை விசாரித்த அதிகாரிகள் கூட காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயமுறுத்தி அடக்க முடியாது என்பதை புரிந்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாளை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக  நிலையில், அவர் ஆஜராவாரா அல்லது அவகாசம் கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.