திண்டுக்கல்லில் ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டாசுக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. ஒருவர் உடல் கருகி பலி.!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த பட்டாசுக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

பட்டாசுகடையில், விற்பனைக்காக வாங்கி வரப்பட்ட வெடிகளை பணியாளர்கள் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன் இந்த கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இக்கடை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.