நேஷனல் ஹெரால்டு வழக்கு: “ஏஜென்சிகள் விசாரணையால் காங்கிரஸை நசுக்க முடியாது!" – ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு நாளிதழை ராகுல், சோனியா காந்தி இருவருக்கும் சொந்தமான யங் இந்தியா கம்பெனியால் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு டெல்லியிலிருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரானபோது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களை நடத்தினர்கள்.

ராகுல் காந்தி – மோடி

இந்த நிலையில், இது தொடர்பாக கட்சித் தொண்டர்களிடம் கூட்டமொன்றில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் சார்பில் நடைபெற்ற விசாரணையில், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயத்தால் ஒருபோதும் அடக்க முடியாது என்பதை என்னை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள்கூட புரிந்து கொண்டனர். இது போன்ற ஏஜென்சிகள் என்னை பாதிக்காது. அமலாக்கத்துறை விசாரணையின்போது கட்சித் தொண்டர்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் தனியாக இல்லை. ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் அனைவரும் என்னுடன் இருக்கின்றனர்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். உண்மையான தேசபக்தி என்பதை இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அறிவார்கள். பா.ஜ.க அரசாங்கம் நம் நாட்டின் இராணுவத்தை பலப்படுத்த வேண்டும். ஆனால் பா.ஜ.க அதை பலவீனப்படுத்துகிறது. இவையனைத்தும் போரின்போது விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.