உத்தரபிரதேசத்தில் போலீசின் புல்டோசர் அணிவகுப்பு

லக்னோ: பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து  வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை உத்தரபிரதேச அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்தனர். அநேரேம் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற இடங்களில், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அதையடுத்து பொது அமைதியை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் நடத்திய அணிவகுப்பில் புல்டோசர் இடம்பெற்றது சர்ச்சையாகி உள்ளது. இதை காவல்துறை மறுக்கவோ ஏற்கவோ இல்லை. ஆனால் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.