பெல்ட்டால் கழுத்தை நெறித்து தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.!

சென்னை முகப்பேரில் மது போதையில் தகராறு செய்த தம்பியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்த சந்திரன் என்பவர், செவ்வாய்கிழமை இரவு மது போதையில் அண்ணன் மகளின் செல்போனை பறித்து போட்டு தகராறு செய்துள்ளார்.

ஆத்திரமடைந்த அவரது அண்ணன் ராசு, சந்திரனை அடித்ததுடன், பெல்ட்டால் கழுத்தை இறுக்கி உள்ளார். மயக்கமடைந்த சந்திரனை 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்து இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். ராசுவை போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.