அரச ஊழியர்கள் தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லல்: சுற்றுநிருபம் வெளியீடுவெளியீடு

அரச ஊழியர்கள்  வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள்  முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்

 www.gov.lk என்ற இணையத்திற்குப் பிரவேசித்து இதுபற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அரச சேவையாளர்களின் ஓய்வூதியத்திற்கோ சேவைக்காலத்திற்கோ பாதிப்பு இல்லாத வகையில் 5 வருட காலம் வெளிநாட்டில் தொழில்புரிய இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.