’மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்கக் கூடாது’ – தமிழக கட்சிகள் மத்திய அமைச்சரிடம் மனு

காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனி மாணிக்கம், தம்பிதுரை மற்றும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் கஜேந்திரசிங் ஷேகாவத்தை சந்தித்தனர்.
image
காவேரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்கக் கூடாது எனவும் மனு அளிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.