ஆப்கன் நிலநடுக்கம்; உடைகளை இழந்த மக்கள்: உதவிக் கோரும் தலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரித்தது,

இந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தலிபான் அரசின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நில நடுக்கத்தினால் வீடுகளையும், தங்கள உடைமைகளையும் இழந்த மக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது உடைமைகள் அனைத்தையும் இழந்த பெரியவர் ஒருவரின் கண்ணீர், இடிந்த வீட்டின் முன் நிண்றுக் கொண்டு போஸ் கொடுக்கும் குழந்தை என அப்புகைப்படங்கள் நீள்கின்றன.

ஆப்கனில் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில் இந்த நிலநடுக்க மீட்டுப் பணிகள் தலிபன் அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளின் உதவியை தலிபன்கள் நாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.