மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை முயற்சி

கர்நாடகா: மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே பத்மனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிதேஷ் செட்டிகர்.இவருக்கு திருமணமாகி, ரஷ்மிதா (13) என்ற பெண்ணும், உதய் (11) மற்றும் தக்ஷித் (4) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை ஹிதேஷ் செட்டிகர், தனது மூன்று குழந்தைகளையும் திடீரென அவரது வீட்டில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.மேலும் அவரும் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளையும் மீட்டனர். தொடர்ந்து இதற்கு காரணமான குழந்தைகளின் தந்தை ஹிதேஷ் செட்டிகர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் குடும்ப பிரச்னை அல்லது கடன் சுமையால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் பெற்றெடுத்த மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.