#BREAKING : ரேஷன் அட்டைகளை அஞ்சல்  வழியாக அனுப்ப தமிழக அரசு உத்தரவு.!

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அஞ்சலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவு.

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் அஞ்சல் வழியாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டையை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் செய்யப்படும் என்றும் புதிய குடும்ப அட்டையுடன் அதனை செயலாக்கம் செய்யும் முறை குறித்த விளக்க குறிப்பும் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.