திசையன்விளையில் பட்டா மாறுதலுக்கு ரூ.6,000 லஞ்சம் கேட்ட சர்வேயர் கைது

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பட்டா மாறுதலுக்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

மணலிவிளை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்திற்கு பட்டா மாறுதல் கோரி திசையன்விளை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதற்காக அன்பழகன் என்ற சர்வேயர், லஞ்சம் கேட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் மகாலெட்சுமி புகாரளித்தார்.

இதனை அடுத்து, கேட்ட பணத்தை தருவது போல் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சர்வேயரிடம் மகாலெட்சுமி வழங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.