சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம்.. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புது காலணி அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புது காலணி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சத்து மாத்திரையும் அதன்பிறகு மதியம் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது.

இதனை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தலை சுற்றல் வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள ஆரம்பநிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.