மதுரை: கட்டிடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி!

மதுரையில் கட்டிட பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் விரகனூர் ரிங்ரோடு சந்திப்பு அருகே அருப்புக்கோட்டை சாலையில் ஜெகதீசன் என்பவருடைய மகன் விவேக் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த கட்டுமான பணியானது நீர்நிலைப்பகுதியில் கட்டப்படுவதாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில் தொடர்ந்து பணிகள் நடைபெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
image
இந்நிலையில் இன்று கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அப்போது பணியில் இருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அரசங்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இடிபாடுகளுக்கு சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
image
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் கட்டிட இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்திற்கு காரணமான கட்டிட உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.