முகம் சிதைந்த நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்.! அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்.! 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அவரது வீட்டில் முகம் சிதைந்த நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கோணசமுத்திரம் என்ற கிராமத்தில் ராதா என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

எனவே அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கே அழுகிய நிலையில் ராதா கிடந்துள்ளார். 

மேலும் அவர் நிர்வாண நிலையில் பிணமாக இருந்தது பேரதிர்ச்சியை கொடுத்தது. ஒருவேளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ராதா இருந்தாரா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.