'இபிஎஸ்க்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுகிறேன்’ – மேலூரில் பேனரால் பரபரப்பு

ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டித்தேவன்வலசையில் ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை செயல்பட்டதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதேபோன்று, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக நகரச் செயலர் பாஸ்கரன் என்பவர் பேனர் வைத்துள்ளார்.
image
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் , அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்ததை , தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் , அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் , அம்மாவின் உண்மை விசுவாசியான ஒபிஎஸ் க்கு இனி என்னுடைய ஆதரவு என , மேலூர் அதிமுக நகர கழக செயலாளர் பாஸ்கரன் என்பவர் மேலூர் பேருந்து நிலையம் அருகே பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.