இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட்| Dinamalar

லண்டன்: கோவிட் காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இப்போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ல் நடக்கிறது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கையில், ‛இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் அணியின் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆல்-ரவுண்டர் அஸ்வின் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி சமீபத்தில் மாலத்தீவு சென்று விட்டு திரும்பியபோது கோவிட் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர் தப்போது குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.